தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கினைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாட்டால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இதயம் செயல் இழப்பால், மரணமடைந்தார். 

சென்னை, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதரமர் மோடி, கவர்னர் வித்தியாசாகர் ராவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ஜெயலலிதா மறைவு செய்தி கேட்டதும், டுவிட்டரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார், “ ஆம் ஆத்மியின் முதல்வர் ஜெயலலிதா. மிகவும் புகழ் பெற்ற தலைவர். அவரின் ஆன்மா சாந்திஅடைய பிரார்திக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்னை வந்தார். 

சென்னை ராஜாஜி அரங்குக்கு வந்த முதல்வர் கெஜ்ரிவால், ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ ஜெயலலிதா மிகவும் துணிச்சல் மிக்க பெண். ஏழைமக்களின் நலனுக்காக உழைத்தவர். அரசியலில் அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு எனது ஆறுதல்கள்” என்றார். 

முன்னதாக டுவிட்டரில் கெஜ்ரிவால், ஜெயலலிதா மறைவு குறித்து கருத்து தெரிவிக்கையில், ஆம்ஆத்மியான எங்கள் கட்சியின் தலைவர் என்றும் புகழ்ந்து, சமானிய மக்களின் தலைவரும் என்று பெருமைப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.