தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், மாநில அரசு வழி வந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தமிழக வரலாற்றில் தமிழர்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஒரு சில நாட்களில் கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.பொதுவாக ஒரு போராட்டம் என்றால், நாம் மாத கணக்கில், வருட கணக்கில் நீடிக்கும்.

ஆனால், 48 மணி நேரத்துக்குள் உலகின் பார்வையையே திரும்பி பார்க்க வைத்த இந்த போராட்டத்தால், முடிவு எட்டப்பட்டுள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்க ஆவணங்கள், தயாராகி கொண்டிருக்கின்றன.

ஜல்லிக்கட்டு அவரச சட்டத்தை பொறுப்பாளர் வித்யாசாகர் ராவ், இன்று ஒரு சில நாட்களில் அறிக்கையாக விளியிடுவார் என முதலமைச்ர் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிபிப்பு செயல்பாட்டூக்கு வந்தால், இந்த விஷயம் மாபெரும் வெற்றியாகும்.