Asianet News TamilAsianet News Tamil

ராயபேட்டை சரவண பவன் ஓட்டல் சீல் வைப்பு - - மாநகராட்சி நடவடிக்கை

hotel saravana-bavan-sealed-by-chennai-corporation
Author
First Published Jan 31, 2017, 6:17 PM IST


சென்னை ராயபேட்டை  பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் சரவண பவன் இன்று சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் ஆணையின் படி மூடி சீல் வைக்கப்பட்டது. 

 

ராயபேட்டையில் அமைந்துள்ள ஹோட்டல் சரவணபவன் தொழில் உரிமம் மற்றும் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லை என்ற காரணத்தினாலும் மாநகராட்சி உதவி ஆணையரின் உத்தரவின் பேரில் வருவாய் துறையை சார்ந்த உதவி வருவாய் அலுவலர் மற்றும் உரிமம் ஆய்வாளர்கள் பொது மக்கள் முன்னிலையில் அரக்கு முத்திரையிட்டு கடையினை முடி சீல் வைத்தனர்.

hotel saravana-bavan-sealed-by-chennai-corporation

சரவண பவன் ஹோட்டல் பிரசித்தி பெற்றது. பல ஆண்டுகள் இந்த ஹோட்டல் அங்கு உள்ளது. பத்தாண்டுகளுக்கு மேலாக வாகன நிறுத்தம் புகார் வராத நிலையில் திடீரென அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கை.

hotel saravana-bavan-sealed-by-chennai-corporation

தீயணைப்புத்துறை லைசென்ஸ் பெறாதது , ரெஸ்டாரண்ட் அனுமதி பெற்று பேக்கரி நடத்தியது.

 

அனுமதி இன்றி கூடுதலாக மாடி கட்டியது போன்ற புகார்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios