Asianet News TamilAsianet News Tamil

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 8 மாவட்டங்களில் மிக கனமழை.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Heavy Rain in 8 districts - Weather Update
Author
Tamil Nadu, First Published Aug 1, 2022, 3:05 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்ட தகவலில்‌, தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 

01.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, பெரம்பலூர்‌,அரியலூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, திருவாரூர்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும்  விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்  மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:மதுரையில் கலைஞர் நூலக கட்டிடத்தில் விபத்து..!! வடமாநில இளைஞர் உயிரிழந்ததால் பரபரப்பு

03.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது  என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. கடந்த 24 மணிநேரத்தில்‌ அதிகபட்சமாக மதுரை மாவட்டம்‌ உசிலம்பட்டியில்‌ 11 செ.மீ., சிவகங்கை மாவட்டம்‌ திருப்புவனத்தில்‌ 10 செ.மீ, மழைப்பதிவாகியுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:அனைத்து ரக நூல் விலையும் கிலோவிற்கு ரூ30 குறைவு.. ஜவுளித்துறையில் புதிய ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு..

Follow Us:
Download App:
  • android
  • ios