Asianet News TamilAsianet News Tamil

இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அலர்ட்

தமிழகத்தில் இன்றும் நாளையும் விழுப்புரம், கடலூர், மயிலாடுத்துறை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heavy Rain in 26 districts today - Weather Report
Author
First Published Oct 14, 2022, 2:54 PM IST

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

14.10.2022 மற்றும்‌ 15.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌,
கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி, திண்டுக்கல்‌, தேனி, கரூர்‌, நாமக்கல்‌, ஈரோடு, திருப்பூர்‌, கோவை‌, நீலகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌, புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலூர்‌, மயிலாடுதுறை,நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, சிவகங்கை, விருதுநகர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, நாமக்கல்‌,
கரூர்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தார்‌, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை
பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:முதுகலை ஆசிரியர் பணிகளுக்கு நாளை நேரடி நியமன கலந்தாய்வு.. மையங்கள் விவரம் வெளியீடு..

17.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாகப்பட்டினம்‌,மயிலாடுதுறை, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, கடலூர்‌, அரியலார்‌, பெரம்பலூர்‌,
சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, நாமக்கல்‌, திருச்சி, கரூர்‌, திண்டுக்கல்‌, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, தென்காசி, கன்னியாகுமரி மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது.

18.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி,திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோவை‌, நீலகிரி, ஈரோடு,
சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்சவெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

14.10.2022 : தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளின்‌ தெற்குப்பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்குவங்கக்கடல்‌ மற்றும்‌ கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..

 

Follow Us:
Download App:
  • android
  • ios