9240 லிட்டர் எரி சாராயத்தை கண்டுபிடித்த பழவூர் தனிப்பிரிவு காவலர் சுடலைக்கு வீர தீர செயலுக்கான விருதை எஸ்.பி. அறிவித்தார்.
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் சுடலை (Gr.1 PC 1379).
இவர் கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி பழவூர் அருகில் உள்ள தெற்கு கருங்குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 9240 லிட்டர் எரி சாராயத்தை தனி ஒருவராகக் கண்டு பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
தகவல் அறிந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர் விக்ரமன், காவலர் சுடலையை நெஞ்சார பாராட்டினார்.
நவம்பர் மாத சிறந்த செயலாளர் (BEST PERFORMERS) விருதும், அறிவித்து கெளரவப்படுத்தி உள்ளார்.
வீர தீர செயலுக்காக பதக்கம் பெற்ற காவலர் சுடலைக்கு நம் அனைவரின் பாராட்டுகளையும் தெரிவிப்போம்.
