தமிழகத்தில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது அறிவிப்பில், தமிழகத்தில் காலியாகயிருக்கும் 7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு ஜூலை மாதம் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 7 ஆயிரத்து 382 பணியிடங்களில், 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவினர் மூலம் நிரப்பப்படும்.

குரூப் 4 தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாவும், 75 கேள்விகள் பொது அறிவு தொடர்பு உடையதாகவும் இருக்கும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதத்துக்குள் காலியாகும் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறும் என்றும், குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள். இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பபடும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது குரூப் 2 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.