மருத்து கடையில் அனுமதியில்லாமல் மனநோய் மற்றும் தூக்க மாத்திரைகளை விற்றால் கடைக்கு சீல் வைப்பதோடு உரிமமும் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுமதியில்லாமல் மருத்து விற்பனை
தமிழகத்தி்ல் பல்வேறு மருந்தகங்களில் டாக்டரின் அனுமதியில்லாமல் தூக்க மற்றும் மனநோய் மருந்துகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதடையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மருத்து கட்டுப்பாடு இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனநோய் மற்றும் தூக்கமருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை கடைகளில் அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த திடீர் தொடர்ச்சியாக சோதனைகள் சோதனைகளின்போது சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வலிநிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி மருத்துவரின் பரிந்துரைசீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

கடையின் உரிமம் ரத்து
எனவே அந்த மருந்து கடைக்கு கொட்டிவாக்கம் சரக மருந்துகள் ஆய்வாளரால் பெருங்குடி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அம்மருந்துக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள். மன நோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
