Father drunk and disputed Son killed hit by iron rod
தருமபுரி
தருமபுரியில் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்த தந்தையை இரும்புக் கம்பியால் மகன் அடித்து கொன்றுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த காவலாளர்கள் மகனை கைது செய்தனர்.
பின்னர், இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகன் சூர்யா மீது கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் காவலாளர்கள்.
குடித்துவிட்டு வந்து தகராறு செய்த தந்தையை இரும்புக் கம்பியால் மகனே அடித்து கொன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
