Asianet News TamilAsianet News Tamil

டெல்லியிலும் பல்பு வாங்கிய தமிழக அமைச்சர் - ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கமிட்ட விவசாயிகள்

farmers opposed minister jayakumar
farmers opposed-minister-jayakumar
Author
First Published Mar 31, 2017, 5:21 PM IST


டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்கச் சென்ற  நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கமிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வறட்சி நிவாரணம், காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள். திரைபிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், என பல்வேறு தரப்பினரும் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

farmers opposed-minister-jayakumar

இதற்கிடையே தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், போராடும் விவசாயிகளை இன்று நேரில் சந்தித்தார். 

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சருக்கு எதிராக திடீரென முழக்கமிடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது "விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறது.

farmers opposed-minister-jayakumar

விவசாயிகளுக்கு திட்டங்களை வழங்குவதன் மூலம் நாடு ஏற்றம் பெறும். வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செலுத்தி விட்டது. விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகையை மத்திய அரசு தான் பெற்றுத் தர வேண்டும். வறட்சி நிவாரணம் தர மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் தந்துள்ளது. கூடுதல் வறட்சி நிவாரணம் தருமாறு  மத்திய அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு ஜெயக்குமார் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios