வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஒரு சில இடங்களில் தரைகாற்று மணிக்கும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர் , தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனம்‌ காரணமாக,

05.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும்‌, இடி, மின்னல்‌ சமயத்தில்‌ தரை காற்று மணிக்கு 40 முதல்‌ 50
கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது.

06.05.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்‌, தேனி, மதுரை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, ஈரோடு, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

07.05.2022 முதல்‌ 09.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 -3 டிகிரி செல்‌சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

குறிப்பு:

தெற்கு அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஓட்டியுள்ள பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இப்பகுதிகளில்‌ 06 ஆம் தேதி ஓர்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌. இது வடமேற்கு இசையில்‌
நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌. இதன்‌ காரணமாக,

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

 05.05.2022: தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

06.05.2022: அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

07.05.2022: மத்திய கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய வடக்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 60 முதல்‌ 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 80 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

08.05.2022. 09.05.2022: மத்திய கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 60 முதல்‌ 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.