Asianet News TamilAsianet News Tamil

என்ன செய்தோமா..? சொல்லாததையும் செய்திருக்கிறோம்… பெருமிதம் கொண்ட ஸ்டாலின்

சொல்லாததையும் ஆட்சியில் நிறைவேற்றி இருக்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

 

CM Stalin speech
Author
Salem, First Published Sep 29, 2021, 8:53 PM IST

சேலம்: சொல்லாததையும் ஆட்சியில் நிறைவேற்றி இருக்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

CM Stalin speech

சேலம் மாவட்டம் கருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

கடன் உத்தரவாத திட்டம், ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 4 சேகோ சேர்வ் சேமிப்பு மையங்கள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பெரிய சீரகபாடியில் உணவு பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

திமுக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து முடித்திருக்கிறோம் என்று கூறி உள்ளார்.

முன்னதாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கலைஞரின் வரும்முன் காப்போம் என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios