என்ன செய்தோமா..? சொல்லாததையும் செய்திருக்கிறோம்… பெருமிதம் கொண்ட ஸ்டாலின்
சொல்லாததையும் ஆட்சியில் நிறைவேற்றி இருக்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
சேலம்: சொல்லாததையும் ஆட்சியில் நிறைவேற்றி இருக்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
சேலம் மாவட்டம் கருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
கடன் உத்தரவாத திட்டம், ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 4 சேகோ சேர்வ் சேமிப்பு மையங்கள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பெரிய சீரகபாடியில் உணவு பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
திமுக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து முடித்திருக்கிறோம் என்று கூறி உள்ளார்.
முன்னதாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கலைஞரின் வரும்முன் காப்போம் என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.