Asianet News TamilAsianet News Tamil

காட்டுத்தீயில் பலியாகிய சென்னை பெண் - உயிரிழந்தோர் எண்ணிக்கை  10ஆக உயர்வு

Chennai girl killed in kurangani wildfire
Chennai girl killed in kurangani wildfire
Author
First Published Mar 12, 2018, 5:38 PM IST


தேனி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios