chain snatching in teacher...
மதுரையில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் 5 சவரன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் கார்த்திகேயினி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மதுரை அவனியாபுரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் கார்த்திகேயினியின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து சென்று அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து கார்த்திகேயனி போலீசாரிடம் புகார் அளித்தார். தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
