வெடிகுண்டு வீசி தொழிலதிபர் கொலை - புதுச்சேரியில் பயங்கரம்...
புதுச்சேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே சந்நியாசிகுப்பத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் வேலழகன். இவர் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் வேலழகன் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் படுகாயமடைந்த வேலழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.