கள்ளக்காதலனை அடிக்க பாய்ந்ததால் கோபத்தில் கணவனின் மர்ம உறுப்பை கடித்து துப்பிய மனைவி!
இதுவரை நீங்கள் எத்தனையோ கள்ளக்காதல் தொடர்பான செய்தியை அறிந்திருப்பிர்கள். இது வித்தியசாமான கள்ளக்காதலாக உள்ளது. மனைவியின் கள்ளக்காதலனை அடிக்க பாய்ந்த போது கணவரின் மர்ம உறுப்பை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை அடுத்த துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தாமரை - ஜெயந்தி தம்பதியினர். செந்தாமரை கூலி வேலை செய்து வருகிறார். ஆடி மாதம் என்றாலே கோவில் திருவிழா நடைபெறு வழக்கம். அந்த கிராமத்தில் தெருக்கூத்தும் நடைபெற்றுள்ளது. இந்த தெருக்கூத்தை பார்க்க மனைவியை செந்தாமரை அழைத்துள்ளார். ஆனால் ஜெயந்தி வரவில்லை என்று கூறிவிட்டார். பிறகு செந்தாமரை மற்றும் தெருக்கூத்துக்கு சென்றார்.
மனைவி தனியாக இருப்பதால் தெருக்கூத்து பாதியிலேயே விட்டுவிட்டு செந்தாமரை வீடு திரும்பினார். அப்போது வீட்டிற்கு வந்த கணவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுடன் உல்லாசமாக இருப்பதை கண்ணாலேயே பார்த்துவிட்டார். மனைவியின் செயலை கண்ணால் பார்த்ததால் மிகுந்த ஆத்திரம் அடைந்த செந்தாமரை அந்த இளைஞனை அடிக்க முயற்பட்டார்.
அந்த இளைஞனை விட்டுவிடுமாறும் ஜெயந்தி தன் கணவரிடம் கெஞ்சினால். ஆனாலும் இளைஞனை செந்தாமரை விடவில்லை. கடும் கோபம் அடைந்த மனைவி தன் கணவனின் மர்ம உறுப்பை கடித்து துப்பினார். இதில் மர்ம உறுப்பு பாதி துண்டாகிவிட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் செந்தாமரை துடித்தார்.
அந்த இளைஞனோ போதுடா சாமி இதுதான் சமயம் என்று தப்பி ஓடிவிட்டார்.
செந்தாமரை வலியால் துடித்து அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனையடுத்து உடனே அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.