பெரிதும் எதிர்பார்த்த புத்தக கண்காட்சி...! சென்னையில்..ஜனவரி 10 முதல்...!
சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி அடுத்த மாதம் துவங்க உள்ளதால், அதற்கான அறிவிப்பு வெளியாய் உள்ளது
ஆண்டு தோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தகண்காட்சி அனைவராலும் எப்போதும் வரவேற்கப்படும் ஒரு நிகழ்வு
அந்த வரிசையில்,இந்த ஆண்டுக்கான 2018 ஆம் ஆண்டுக்கான புத்தககண்காட்சி தொடங்கும் தேதி தற்போது வெளியாகி உள்ளது
தென்னிந்திய புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி ஆண்டுதொருன் நடத்தப் படுவது வழக்கம்.இந்த சமயத்தில் வெளி ஊர்களிலிருந்தும்,வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான நபர்கள் வந்து புத்தகங்களை அள்ளி செல்வார்கள்
இந்நிலையில் இந்தஆண்டுகான கண்காட்சி வரும் 2018 ஜனவரி 10 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராக அமைந்தகரை புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது இதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது