Asianet News TamilAsianet News Tamil

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை "மறு பிரேத பரிசோதனை" செய்ய உத்தரவு..! உயர்நீதிமன்றம் அதிரடி..!

body need to re postmartum said chennai high court
body need to re postmartum said chennai high court
Author
First Published May 30, 2018, 9:08 PM IST


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நூறு நாட்களாக மக்கள் போரட்டதில் ஈடுபட்டனர்.

நூறாவது நாளில் வன்முறை வெடித்தது. அதில் 13  பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களின் உடல்களை மேலும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது

மேலும் மற்ற 6  பேரின் உடல்களை ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த போராட்ட்டத்தில் பலத்த காயம் அடைந்தவர்கள் மருத்துவ மனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை பல அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதே போன்று இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios