பி.இ. மாணவர் சேர்க்கை…. இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்….
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங்., மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும், ஒற்றைசாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூன், 27ல், தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ ஜூன் 3 ஆம் தேதிக்கும் அனுப்ப வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு (பி.இ.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இது குறித்த முக்கிய விபரங்களை பார்ப்போம்…
ஆன்-லைன் பதிவுக்கு கடைசி நாள் 31.5.2017ஆன்-லைன் பதிவு தொடக்கம்….. 01.05.2017
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் 3.6.2017
சமவாய்ப்பு எண் வெளியீடு…20.6.2017
தரவரிசைப் பட்டியல் வெளியீடு ….22.6.2017
கலந்தாய்வு தொடங்கும் நாள்,,,, 27.6.2017