அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்...!!!
பழனியில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
பழனியில் இருந்து தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுகொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, வத்தலகுண்டு அருகே சாலைபுதூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கும் ஆம்புலன்ஸ்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.