anna univ professors meeting

அண்ணா பல்கலை கழகத்தில் 7 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க பேராசிரியர் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் ஜூன் 27ம் தேதி முதல் பொறியியல் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் அதற்கான பட்டியலையும் வெளியிட்டார். தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலை கழகங்களுக்கு விரைவில் துனைவேந்தர் நியமிக்கபடுவார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில், பல்கலை கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், அண்ணா பல்கலை கழகத்தில் 7 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க பேராசிரியர் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

மேலும் துணை வேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடந்தால் அதையும் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.