- Home
- Tamil Nadu News
- TN Govt: பள்ளிகளில் இனி சுடச்சுட சிக்கன் பிரியாணி? தமிழக அரசின் மாஸ் பிளான்! முழு விவரம்!
TN Govt: பள்ளிகளில் இனி சுடச்சுட சிக்கன் பிரியாணி? தமிழக அரசின் மாஸ் பிளான்! முழு விவரம்!
TN Govt: தமிழகத்தின் பள்ளிகளில் மதிய உணவு திட்ட்டத்தில் மாணவர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பள்ளிகளில் சுடச்சுட பிரியாணி?
இந்தியாவிலேயே தமிழ்நாடு பள்ளிக்கல்வித் திட்டத்தில் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் அறிவுப்பசியை போக்குவது மட்டுமில்லாது, வயிற்றுப் பசியை போக்கும் வகையில் அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகவும் புரட்சிகரமான இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் ராஜமோகன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, தமிழக அரசியலிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிய உணவுத் திட்டத்தில் மைல்கல்
தற்போது வழங்கப்படும் முட்டை, காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகளுடன், மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான சிக்கன் பிரியாணியையும் சேர்ப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் கோடிக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் மதிய உணவுத் திட்டத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிப்பதற்கும், ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும் இது உதவும் என அரசு கருதுவதாகத் தெரிகிறது.
பரிசீலனையில் புதிய திட்டம்
இந்த முன்மொழிவின்படி, வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மாணவர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கப்படும். பல தசாப்தங்களாகச் செயல்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தில், அசைவ உணவாக பிரியாணி சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதனால், திட்டத்தின் மெனுவில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகவே இது பார்க்கப்படுகிறது.
தற்போது இது ஒரு முன்மொழிவு அளவிலேயே இருப்பதாகவும், அரசு இதைத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள், நிதி ஆதாரம் மற்றும் விநியோக முறை குறித்து அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. என்ன இருந்தாலும், இப்படி ஒரு யோசனையே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அடுத்தகட்டம் என்ன?
இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனிமேல்தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பரிசீலனைக்குப் பிறகு, இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். இந்தத் திட்டம் குறித்த முழுமையான விவரங்களுக்காக அனைத்துத் தரப்பினரும் காத்திருக்கின்றனர். பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் அதே வேளையில், அவர்களுக்கு விருப்பமான உணவை வழங்கும் ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது. அரசின் இறுதி அறிவிப்பு வெளியான பிறகே, இந்த பிரியாணி திட்டம் எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவரும்.

