Asianet News TamilAsianet News Tamil

மதுரைக்கு ரூ.4499, கோவைக்கு ரூ.4970, ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..! தமிழக அரசு வேடிக்கை- சீறும் அன்புமணி

 விடுமுறை தினத்தை  பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளதாக அன்புமணி, நடுத்தர மக்களை கசக்கிப் பிழியும் ஆம்னி பேருந்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். 
 

Anbumani accused Omni Buses of taking advantage of the holiday to engage in fare theft KAK
Author
First Published Oct 2, 2023, 1:36 PM IST

ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை

ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சனி, ஞாயிறு, காந்தியடிகள் பிறந்தநாள் என  3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றவர்கள் இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும். ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு சென்றிருப்பதையும், அவர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்புவதற்கு தேவையான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததையும் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன.

Anbumani accused Omni Buses of taking advantage of the holiday to engage in fare theft KAK

ஆம்னி பேருந்து டிக்கெட் விலை

அக்டோபர் 2-ஆம் நாளான இன்று இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு திரும்ப அதிக அளவாக ரூ.4460 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லையை விட குறைந்த தொலைவு கொண்ட மதுரையில் இருந்து சென்னைக்கு, அதை விட அதிகமாக ரூ.4499 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4970, திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ.4410 கட்டணம் பெறப்படுகிறது. பூசை விடுமுறை நாட்களுக்காக வரும் 20-ஆம் நாள் சென்னையிலிருந்து மதுரை செல்லவும், விடுமுறை முடிந்து 24-ஆம் நாள் சென்னைக்கு திரும்பவும் அதிக அளவாக ரூ.4440 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  அதேநாட்களில் சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்ல ரூ.4560, அங்கிருந்து சென்னை  திரும்ப ரூ.4620 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Anbumani accused Omni Buses of taking advantage of the holiday to engage in fare theft KAK

10 மடங்கு உயர்ந்த கட்டணம்

சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல ரூ.3700,  சென்னைக்கு திரும்ப ரூ.3753 என்ற அளவிலும், சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.4500, அங்கிருந்து சென்னைக்கு ரூ.4440 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நாட்களில் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவும், அங்கிருந்து சென்னை திரும்பவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இருக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளில் ரூ.459, படுக்கை வசதி பேருந்துகளில் ரூ.920 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை விட தனியார் பேருந்துகளில் 10 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே காலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல ரூ.3,419 மட்டும் தான் கட்டணம்.

Anbumani accused Omni Buses of taking advantage of the holiday to engage in fare theft KAK

விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பேருந்து கட்டணம்

விமானத்தை விட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான காரணமும் நமக்கு விளங்கவில்லை.  "ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அவற்றின் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது. மோட்டார் வாகன சட்டத்தின் 67-ஆவது பிரிவின்படி ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு தான் நிர்ணயிக்க வேண்டும். கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க வேண்டும்’’ என்று 2016-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

Anbumani accused Omni Buses of taking advantage of the holiday to engage in fare theft KAK

பேருந்து உரிமம் ரத்து

ஆனால், அந்தத் தீர்ப்பின் மீது 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும். ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின்  உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

போக்குவரத்து கழகங்களுக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர் தேர்வு- திமுக அரசை விளாசும் எடப்பாடி

Follow Us:
Download App:
  • android
  • ios