'எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்த முதல்நிலை மாநிலமாக தமிழகம் தேர்வு!'
அனைத்து துறைகளிலும் ஒருமித்த வளர்ச்சியடைந்த முதல்நிலை மாநிலமாக தமிழகம் தேர்வு பெற்றுள்ளது.
இந்தியா டுடே குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் 21 பெரிய மாநிலங்களில் பொருளாதாரம், வணிகம், சுகாதாரம், கல்வி, மகளிர் நலம் உள்ளிட்ட துறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து துறைகளிலும் உள்ளடக்கிய இந்த ஆய்வில், ஒருமித்த வளர்ச்சியடைந்த முதல் நிலை மாநிலத்திற்கான விருது தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.
இவ்விருதினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வழங்கிட, தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பெற்றுக் கொண்டார்