அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி சீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு செய்தால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என அவர் கவலை தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி கூட்டம் தீர்மானம் : அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் உங்கள் எல்லாரும் முன்னாடியும் நான் வைக்கிறேன். எல்லா கட்சிகளும் குரல் கொடுக்கணும். மக்கள் தொகை அடிப்படையில மறு சீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டோட மக்களுடைய பிரதிநிதித்துவத்தை எண்ணிக்கையை குறைத்துவிடும். 

மக்கள் தொகை கட்டுப்படுத்த்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாகத்தான் அமையும். அதைத்தான் முன்கூட்டியே உணர்ந்துதான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினோம். தமிழ்நாட்டோட உரிமை, கோட்பாடு தமிழ்நாடு மக்களுடைய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக அப்பவே நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.

தென்னிந்தியாவிற்கே ஆபத்து 

தொகுதி சீரமைப்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல், இதில் நமக்குள்ள கருத்து மாறுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிற அரசியல் அதிகாரத்தின் மீதான நேரடி தாக்குதல். இந்திய அரசியலில் தமிழ்நாட்டோட குரல் நீக்கப்படும். ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிற நிலையில் இந்த எம்பிக்கள் இன்னும் குறைந்தாலோ குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டை கிடைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியா மாறும் என்பதை எல்லோரும் நினைத்து பார்க்கணும்.

 எனவே நம்முடைய நிலைப்பாட்ட அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாகணும், வர இருக்கிற அல்லது எதிர்காலத்தில் நடைபெற இருக்கிற மக்கள் தொகை கணக்கீடு படிப்படியாக மேற்கொள்ள இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி ஒரு சீரமைப்புக்கு எதிராக ஒரு உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் படி அந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

 தீர்மானம் 

 நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்க வகையில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதி தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000 ஆண்டில் பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறு தற்போதும் இந்த வரையறை 2026லிருந்து மேல் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு நீடிக்கனும்

மேலும் நாடாளுமன்றத்தில் தற்போது உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் எந்த விகிதத்தில் தொகுதியில் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

 தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதி அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும் அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளை அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.