a conductor received all the wishes from passengers

கடந்த 8 ஆம் தேதியன்று பேருந்து பயணத்தில் நடந்த மனதிற்கு இதமான சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 எட்டாம் தேதி இரவு, கும்பகோணம் முதல் சென்னை வரையிலான பயணத்தில் (அப்பேருந்தின் எண் TNSTC 0429) 

இந்த பேருந்தில் உள்ள நடத்துனர் திரு. கோவிந்தராஜ் அவர்களின் செயல் பயணிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. காரணம் பயணம் தொடங்கும் முன் நடத்துனர் கூறிய வாக்கியம்

"அன்பிற்குறிய பயணிகளே அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்கள் பயணம் இனிதாய் முடிய என் வாழ்த்துக்கள் " என்றார் 

சிரித்த முகம் 

கோபம் படாமல் பேசுதல் 

சரியான சில்லரை கொடுத்து பயணசீட்டு பெறுபவருக்கு மறவாமல் நன்றி கூறுதல்

பயணம் முடித்து இறங்கும் போது "மீண்டும் ஒரு இனிய பயணத்தில் சந்திப்போம்" 
என்று கூறி உள்ளார்.

 இது போன்ற நடத்துனரை பார்ப்பது மிகவும் அரிது தான். இருப்பினும் அன்றைய தினத்தில், அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.மேலும் பொறுப்புணர்வுடன் அன்பாக பேசிய அந்த நடத்துனரை அனைவரும் வாழ்த்தி சென்றுள்ளனர்