Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்துக்கு 8 விஸ்வகர்மா விருதுகள்... திருச்சி பெல், சேலம் உருக்காலை ஊழியர்களுக்கு விருது!

2016-ம் ஆண்டில் நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டுக்கு தமிழகத்துக்கு 8 விஸ்வகர்கா விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

8 Visva Karma Awards for Tamil Nadu
Author
Tamil Nadu, First Published Sep 18, 2018, 1:48 PM IST

2016-ம் ஆண்டில் நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டுக்கு தமிழகத்துக்கு 8 விஸ்வகர்கா விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. திருச்சியில் உள்ள பெல்(பிஎச்இஎல்) நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 7 விருதுகளும், சேலம் உருக்காலை ஊழியர்களுக்கு ஒரு விருதும் என மொத்தம் 8 விருதுகளும் கிடைத்துள்ளன.

 8 Visva Karma Awards for Tamil Nadu

2016-ம் ஆண்டில் சிறந்த வகையிலான செயல்பாடுகளுக்கு 28 விஸ்வகர்மா தேசிய விருதுகள் 139 பேருக்கும், தேசிய பாதுகாப்பு விருதுகள் 128 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மொத்தம் 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.  இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. விருதுகளை மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் வழங்கினார். 8 Visva Karma Awards for Tamil Nadu

திருச்சியில் உள்ள பிஎச்இஎல்(பெல்) நிறுவனத்தில் முதலாம் யூனிட்டைச் சேர்ந்த ஊழியர்களான கிரேன் ஆப்ரேட்டர் சுந்தர்ராஜன், டர்னர் எம். பத்மநாபன் ஆகியோர் ஏ பிரிவில் விருதுகளைப் பெற்றனர். மேலும் 6 விருதுகளை இந்த நிறுவனத்தின் 24 ஊழியர்கள் பெற்றனர். சேலம் உருக்காலையைச் சேர்ந்த பி.சோமசுந்திரம், டி முருகேசன் உள்பட 6 பேருக்கு பி, சி ஆகிய பிரிவுகளில் விருது பெற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios