6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்! எரித்துக் கொன்ற கொடூரம்!
ஆறு வயது சிறுமியை, 14 வயதே ஆன சிறுவன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டாப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்துள்ளார். நேற்றிரவு சிறுமியின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர்.
சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், வீட்டுக்குள் நுழைந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
சிறுவனின் செயலால் சிறுமி சத்தம்போட்டுள்ளார். பயந்துபோன சிறுவன், சிறுமியின் கழுத்தை துண்டால் நெறித்துக் கொலை செய்துள்ளான். மேலும், சிறுமியின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளான்.
சிறுமியின் வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அருகில் இருந்தோர் வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது சிறுமி எரிந்து கிடந்ததை பார்த்த அவர்கள் அதிர்ச்சியாகினர்.
இதன் பின்னர், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் கொலைக்கு காரணமான சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறு வயது சிறுமி ஒருவரை 14 வயதே ஆன சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.