Asianet News TamilAsianet News Tamil

அலங்காநல்லூருக்கு 5வது நாளாக பஸ் போக்குவரத்து ரத்து

5th day-bus-travel-cancelled
Author
First Published Jan 17, 2017, 11:18 AM IST

தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கூறி வந்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாமும், காவல்துறை இணைந்து தடையை மீறி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து வந்தது.

5th day-bus-travel-cancelled

இதையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 13ம் தேதி முதுல் இந்தபகுதிகளுக்கு பஸ்கள் இயக்கவில்லை. பிற பகுதியில் இருந்து வருவோரை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

5th day-bus-travel-cancelled

குறிப்பாக கடந்த 2 நாட்களாக, பைக், கார், ஆட்டோ ஆகிய வாகனங்கள் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில், இன்று 5வது நாளாக அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios