355 menbers asset detailts sent to delhi head office

சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

போலி நிறுவனங்கள் மூலம் பல கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது . அதனை தொடர்ந்து, தற்போது சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கியது வருமான ரித்துறை

மேலும், 15 கிலோ தங்கம் மற்றும்ரூ. 5.5. கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.தற்போது வரை மட்டுமே இந்த நடவடிக்கை எடுத்துள்ள வருமான வரித்துறை மேலும் பல வரி எய்ப்பு செய்துள்ள நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது 

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட போலி நிறுவனங்களில் கூட அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது 

இந்நிலைலயில் தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என வருமானவரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களை டார்கெட் வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் தற்போது வரை 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது 

 இருந்த போதிலும் முழுவிவரம் சோதனை முடிவடைந்த பிறகே தெரிய வரும் ..