16 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ஐஜி மீது புகார் கூறிய பெண் அதிகாரி ஜெயலட்சுமியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

16 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ஐஜி மீது புகார் கூறிய பெண் அதிகாரி ஜெயலட்சுமியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விவரம்;

* சமூகநீதி மனித உரிமைகள் ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமனம். 

* சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன், குற்ற ஆவண ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

* தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் கழக ஏடிஜிபியாக அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். 

* சேலம் குற்றப்பிரிவு துணை ஆணையர் தங்கத்துரை, சட்டம், ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். 

* சேலம் சட்டம், ஒழுங்கு ஆணையர் சுப்புலட்சுமி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

* சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

* சென்னை குற்றப்பிரிவு சிஐடி ஐ.ஜி. சி.ஸ்ரீதர் நியமனம்.

* சென்னை பெருநகர சட்டம்-ஒழுங்கு(தெற்கு) கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

* மனித உரிமை உதவி ஐ.ஜி. விஜயலட்சுமி சென்னை கமாண்டோ படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

* சென்னை பெருநகர சட்டம்-ஒழுங்கு(வடக்கு) கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் நியமனம்.

* ஊழல் ஒழித்துறை எஸ்.பி.ஜெயலட்சுமி, வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

* வடக்கு மண்டல ஐஜியாக நாகராஜன் நியமனம்

* சியாமளா தேவி - சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக நியமனம்.

* வந்திதாபாண்டே - மத்திய விசாரணை பிரிவு, எஸ்பியாக நியமனம்.

* வெண்மதி- தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டோ படையில் நியமனம்.

* சுமித் சரண் - அமலாக்கத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.