Asianet News TamilAsianet News Tamil

டியூஷனுக்கு சென்ற 13 வயது சிறுமி வன்புணர்வு; இழி செயலில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை; நீதிபதி அதிரடி...

கடலூரில் டியூஷனுக்கு சென்ற 13 வயது சிறுமியை கூலித் தொழிலாளி ஒருவர் வன்புணர்வு செய்துள்ளார். 

13 year girl raped 10 years imprisonment kooli

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேவுள்ளது சின்னதானங்குப்பம். இப்பகுதியில்  உள்ள மேற்குத்  தெருவைச் சேர்ந்த தணிகாசலம் மகன் செந்தில் குமார். கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள உள்ளனர்.

kadalur name க்கான பட முடிவு

செந்தில் குமார் வீட்டின் வழியாக தினமும் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி டியூஷனுக்கு செல்வது வழக்கம். அந்தச் சிறுமியிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் ஒருநாள் அந்த சிறுமியை வீட்டின் பக்கத்தில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் செந்தில் குமார். அங்கு, அந்தச் சிறுமியை வண்புணர்வு செய்துள்ளார். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்தச் சிறுமியை மிரட்டியுள்ளார். 

small girl raped க்கான பட முடிவு

பின்னர், கடந்த 2016, செப்டம்பர் 19-ஆம் தேதியும் டியூஷனுக்கு சென்ற சிறுமியை வழிமறித்து வண்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி வீட்டுக்கு ஓடிவிட்டார். சிறுமியின் பயத்தோடே சில நாள்கள் இருப்பதை கண்ட பெற்றோர் விசாரித்தபோது நடந்ததை கூறினாள். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி, வழக்குப்பதிந்து செந்தில் குமாரை காவலாளர்கள் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வப்பிரியா வாதாடினார்.

jail க்கான பட முடிவு

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேசுவரன் தீர்ப்பு வழங்கினார். அதில், "குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்ட செந்தில் குமாருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்படுகிறது" என்றார். தீர்ப்புக்கு பிறகு செந்தில் குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios