ஜுலை மாதத்தில் இருந்து தொடர்ந்து இன்று வரை 101 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாக அப்படியே இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை கடந்த ஜுலை மாதம் 23 ஆம் தேதி முதல் முறையாக அதன் முழுக் கொள்ளவை எட்டிய நிலையில் கர்நாடகா மாநிலத்தில் அடுத்தடுத்து பெய்த மழையால் நான்கு முறை நிரம்பி வழிந்தது. இதையடுத்து பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
தொடர்ந்து மேட்டுர் அணைக்கு இன்று வரை கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் தற்போது 13 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மேட்டூர்அணையின்நீர்மட்டம்தொடர்ந்து 100 நாட்களைக்கடந்து, 100 அடிக்கும்மேலாகநீடிக்கிறது. மேட்டூர்அணையின்நீர்மட்டம்கடந்த 2005ம்ஆண்டுஆகஸ்ட் 3ம்தேதிமுதல் 2006 நவம்பர் 6ம்தேதிவரை 424 நாட்கள் 100 அடியாகநீடித்தது.
மேலும், 2011ம்ஆண்டில் 78 நாட்களும், 2014ம்ஆண்டில் 42 நாட்களும்மேட்டூர்நீர்மட்டம்தொடர்ந்து 100 அடியாகஇருந்தது. நடப்பாண்டில், தற்போதுமேட்டூர்அணையின்நீர்மட்டம் 101ஆவதுநாளாக 100 அடிக்கும்மேலாகநீடிக்கிறது. இதனால்அணைப் பகுதியைஒட்டியுள்ளகிராமங்களில்நிலத்தடிநீர்மட்டம்அதிகரித்துள்ளது.

அணையில்இருந்துகாவிரிடெல்டாபாசனத்திற்குவிநாடிக்கு 13 ஆயிரம்கனஅடியும், கிழக்கு, மேற்குகால்வாய்பாசனத்திற்கு 700 கனஅடியும்எனமொத்தம்விநாடிக்கு 13,700 கனஅடிநீர்திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 103.76 அடியாகவும், நீர்இருப்பு 69.80 டிஎம்சிஆகவும்உள்ளது.
மேட்டூர் அணையின் இந்த நீர் இருப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. இந்த ஆண்டு விவசாயத்துக்கு இந்த நீர் போதுமானது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
