Asianet News TamilAsianet News Tamil

திருப்பூரில் வரதட்சணை கேட்டு மனைவியின் குடும்பத்தையே பந்தாடிய காதல் கணவன் மீது வழக்கு

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு நள்ளிரவில் அடியாட்களுடன் மனைவியின் குடும்பத்தாரை தாக்கிய கணவன்-காதல் திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கணவன்‌ வெறிச்செயல்

whole family attacked by son in law for dowry issue in tiruppur
Author
First Published Mar 20, 2023, 7:43 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புக்கிலிபாளையத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை மங்களத்தில் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் மோகனப்பிரியா. விஜயனும், மோகனப்பிரியாவும் தந்தையின் எதிர்ப்பை மீறி ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமான நான்கு மாதத்திலேயே விஜயன் மோகனப்பிரியாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் விஜயின் மீது மோகனப்பிரியா புகார் அளித்துள்ளார். பல்லடம் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இரவு 4, 5 அடியாட்களுடன் விஜயன் மோகனப்பிரியாவின் வீட்டில் புகுந்து அவரது குடும்பத்தார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் துப்பாக்கியோடு வலம் வந்த பெண்ணால் பரபரப்பு

இதில் காயமடைந்த மோகனப்பிரியாவின் தந்தை மூர்த்தி, மற்றும் அவரது தாய் ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயன் மோகனப்பிரியாவின் வீட்டில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காதல் திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், விஜயின் மீது கடும் நடவடிக்கை எடுத்து தனது மகளின் வாழ்க்கையை காப்பாற்றுமாறும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் மோகனப்பிரியாவின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios