Asianet News TamilAsianet News Tamil

என்னால முடியல! நான் தற்கொலை செஞ்சுக்க போறேன்! தோழிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்.!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூங்கா சாலை வி.எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் ஸ்வேதா (21). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த ஸ்வேதா செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை.

College student commits suicide in Tiruppur
Author
First Published Jul 19, 2023, 1:39 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூங்கா சாலை வி.எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் ஸ்வேதா (21). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த ஸ்வேதா செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்வேதா தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தீவிர மன அழுத்த நோயால் (ஓசிடி) பாதிக்கப்பட்டிருந்த ஸ்வேதா கடந்த சில ஆண்டுகளாக அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். 

கடந்த மார்ச் மாதம் மன அழுத்தத்துக்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஸ்வேதா வீடு திரும்பியுள்ளார். இதுபோன்று அடிக்கடி ஸ்வோதா தற்கொலைக்கு முயன்றுள்ளாராம். கடந்த சில நாள்களாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்வேதா காலையில் தாமதமாகத்தான் எழுவாராம். செவ்வாய்க்கிழமை காலை 9 மணியாகியும் கதவைத் திறக்காததால், வழக்கம்போல் தாமதமாக எழுவார் என ஸ்வேதாவின் தாய் ராஜாமணி இருந்துள்ளார்.

இந்நிலையில், காலை, ராஜாமணியை செல்போனில் அழைத்த அவரது சகோதரர் மகள் நித்யா, மன அழுத்த பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஸ்வேதா தனக்கு திங்கள்கிழமை இரவு மெசேஜ் அனுப்பியுள்ளாதாக கூறியுள்ளார்.  அதிர்ச்சி அடைந்த ஸ்வேதாவின் தாய் , அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்வேதா அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மன அழுத்த பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios