Asianet News TamilAsianet News Tamil

அரசுப் பேருந்து மோதி தேனி பேருந்து நிலையத்தில் ஒருவர் பலி

தேனி பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் தலை நசுங்கி இரத்த வேல்லத்தில் பலி.

one person killed while government bus hit in theni busstand vel
Author
First Published Nov 25, 2023, 4:58 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சருத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாரியப்பன் (வயது 45). இவர்  சருத்துபட்டி கிராமத்தில் பலசரக்குகடை வைத்து நடத்தி வருகிறார். இன்று கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக  தேனி பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்துள்ளார்.

அப்போது குச்சனூரில் இருந்து தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து அவர் மீது மோதி அரசு பேருந்தின் பின் சக்கரம் மாரியப்பனின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தேனி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாரியப்பன் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கடைக்கு செல்லும் அவசரத்தில் மாரியப்பன் பேருந்து வருவதை கவனிக்காமல் ஒரு பகுதியில் இருந்து எதிர் திசைக்கு செல்ல நினைத்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பாக நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையத்திற்குள்ளேயே பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios