வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி காவிரியாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் ஒகனேக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பரிசலில் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது 

தமிழககர்நாடகஎல்லையானபிலிகுண்டலுக்குவரும்நீரின்அளவுவினாடிக்குசுமார் 70 ஆயிரம்கனஅடியாகஅதிகரித்துள்ளது. இதனால்ஒகனேக்கல்அருவிகளில்வெள்ள நீர்ஆர்பரித்துக்கொட்டுகிறது. மேலும்தொடர் கனமழையினால் சின்னாற்றில்நீர்வரத்துஅதிகரித்துகாவிரியில்கலக்கிறது.இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் உடமைகளோடு பாதுக்காப்பான இடங்களில் வசிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கலில் உள்ளஅருவிகள், நீர்வீழ்ச்சிபகுதிகள்அனைத்தும்வெள்ளத்தால்சூழப்பட்டுவெள்ளக்காடாகமாறியுள்ளன. சினிபால்ஸ், மெயின்அருவி, ஐந்தருவி, ஐவர்பாணிஎனஅனைத்துஅருவிகளையும்மூழ்கடித்தபடிதண்ணீர்ஆர்ப்பரித்துகொட்டுகிறது. மெயின்அருவிக்குசெல்லும்நடைபாதைமீதுதண்ணீர்செல்வதால்நடைபாதைபூட்டப்பட்டுபோலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டுள்ளனர்.இதனால் ஒகனேக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கவோ மற்றும் பரிசலில் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகனேக்கலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தினால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.மேலும்கடந்தசிலதினங்களுக்குமுன்புமேட்டூர்அணைதனதுமுழுகொள்ளளவான 120 அடியைஎட்டியது. காவிரிநீர்பிடிப்புபகுதிகளில்பெய்துவரும்தொடர்மழைமற்றும்ஒகேனக்கல்காவிரியில்இருகரைகளையும்தொட்டபடிவரும்தண்ணீர்அப்படியேமேட்டூர்அணைக்குவருகிறது.எனவே மேட்டூர் அணைக்கு வரும் நீரின்வரத்துவினாடிக்குசுமார் 65 ஆயிரம்கனஅடியாகஅதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது. எனவேஅணையின்பாதுக்காப்புகருதி, அணைக்குவரும்நீர்அப்படியே,வெளியேற்றப்படுகிறது . மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல், வாழை போன்றவை வெள்ளநீரில் முழ்கி சேதமடைந்துள்ளன.தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணை கடல் போல் காட்சியளிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred