Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய ஊழியர்கள்

மதுரையில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

private company employees celebrate ayudha pooja with helicopter in madurai vel
Author
First Published Oct 24, 2023, 11:28 AM IST

ஏரோ டான் நிறுவனம் மற்றும் மை பிளை ஸ்கை நிறுவனம் மூலம் மதுரையை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இச்சேவையானது விமான நிலையம் பின்புறம் நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இருந்து இந்த வான்வழி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்த ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கர்நூலிலிருந்து இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் ஒரு பகுதியாக, மதுரையில் இருந்து வான் வெளி ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் செல்ல 21ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் ரூபாய்  வசுசூலிக்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஒரு முறை ஆறு பேர் பயணம் செய்யும் சிறிய வகை ஹெலிகாப்டர் மூலம் மதுரை மற்றும் மதுரையில் சுற்றி சுற்றுப்புற பகுதிகளை 15 நிமிடங்கள் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஹெலிகாப்டருக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios