கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர் தளபதி  விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து, வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கி  அசத்தி உள்ளனர்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்வதில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். அவரது அன்பு கட்டளைக்கு இணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர், இலவச படிப்பகம், குருதி கொடை முகாம், சாலையோர மக்களுக்கு குளிர் கால போர்வை மற்றும் உணவு வழங்குவது போன்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

சினிமா காட்சிகளை மிஞ்சிய கோவை கொள்ளை முயற்சி சம்பவம்; இராணுவ வீரர் அதிரடி கைது

அந்த வகையில் தான் தளபதியின் விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கோவை சுந்தராபுரம் கோண்டி காலனி எனும் பகுதியில் ஒரு பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுத்து அரிசி, மளிகை பொருட்கள் என வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கி உள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கினார். 

கருவில் சுமந்த தாயை கருவறையில் வைத்து அழகு பார்க்கும் மகன்கள்; சிவகங்கையில் தாய்க்கு கோவில் கட்டிய மகன்கள்

மேலும் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வழங்கினார். மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துள்ள அந்த குடும்பத்தினருக்கு தங்குவதற்கு சரியான ஒரு இடம் இல்லாததால் தவித்து வந்த நிலையில், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு உடனடியாக தனது நிர்வாகிகள் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் மதீப்பீட்டில் இலவச வீட்டை வழங்கியுள்ளனர்.