Asianet News TamilAsianet News Tamil

உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நைட்டுக்கு நான் வரவா.. கல்லூரி மாணவியுடன் ஆபாச சாட்டிங் செய்த பேராசிரியர்.!

வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்? பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப க்ளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ, தனியா இருக்க போர் அடிக்கலயா, நைட்டுக்கு நான் வரவா, வீட்ல அம்மா இருக்காங்க இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நெறயா பண்ணலாம்.

Professor who had porn chats with a college student
Author
Coimbatore, First Published Sep 30, 2021, 1:21 PM IST

கோவை அருகே அரசு உதவிபெறும் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியுடன் ஆபாசமாக சாட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டுகள் வெளியான நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பேரூர் பகுதியில் அரசு உதவி பெறும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருநாவுக்கரசு இளங்கலை பயிலும் மாணவி ஒருவரிடம் ஆபாசமாகக் செய்த டெலிகிராம் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Professor who had porn chats with a college student

இரவு நேரங்களில் அந்த மாணவிக்கு டெலிகிராம் ஆப்பில் திருநாவுக்கரசு சாட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதில், வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்? பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப க்ளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ, தனியா இருக்க போர் அடிக்கலயா, நைட்டுக்கு நான் வரவா, வீட்ல அம்மா இருக்காங்க இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நெறயா பண்ணலாம்.” என்றெல்லாம் பேசியுள்ளார். 

Professor who had porn chats with a college student

மேலும், திருநாவுக்கரசு அந்த மாணவிக்கு சட்டையைக் கழற்றி விட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்த படி செல்பி எடுத்து அனுப்பியுள்ளார். பிறகு இதே போல ‘நீயும் போட்டோ எடுத்து அனுப்பு’ என்றும் கூறுகிறார். இந்த புகார் குறித்து அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கேட்டதற்கு, திருநாவுக்கரசு அதை ஒப்புக்கொள்ளும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதையடுத்து இணைப்பேராசிரியர் திருநாவுக்கரசு மீது கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 

இந்நிலையில், திருநாவுக்கரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிரந்தரமாக அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Follow Us:
Download App:
  • android
  • ios