கோவை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறனாளிக்களுக்கான மறுவாழ்வு என்ற நோக்கில் கொண்டாடப்பட்ட இந்த விழாவை செயற்கை அவயங்கள் துறையில் சிகிச்சை பெற்ற நபர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மேலும் இவ்விழாவில் மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர் வெற்றி செழியன் உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மருத்துவமனை முதல்வர் நிர்மலா செயற்கை அவயங்கள் பொருத்திய மாற்றுத்தினாளிக்கு பூக்களை கொண்டு மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

