அரசு பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பொது இடங்களில் சண்டையிட்டு கொள்வது, பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியரை மிரட்டி தாக்குவது உள்ளிட்ட ஒழுங்கின செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

அரசுப் பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சாலையில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒழுங்கின செயல்

அரசு பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பொது இடங்களில் சண்டையிட்டு கொள்வது, பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியரை மிரட்டி தாக்குவது உள்ளிட்ட ஒழுங்கின செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!

நடுரோட்டில் சண்டை

இந்நிலையில், கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஒதுங்கி நின்றனர். இதனை காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to load tweet…

இதையும் படிங்க;- வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் மக்களே உஷார்.. ஒரு செகண்டில் துடிதுடித்து உயிரிழந்த பள்ளி சிறுவன்..!