சென்னையில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் பலரும் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறாது.

சென்னையில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் பலரும் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறாது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கடந்த ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள். 7,342 பேர் மூன்றாம் பாலினத்தவர். வாக்காளர் பட்டியலில், பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரி செய்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படுகிறது. எனவே, பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறதா? என்பதை வாக்காளர்கள் முதலில் சரிபார்க்க வேண்டும். அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால், தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும்போது அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், இதுவரை பெயரை சேர்க்காதவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே அதற்கு வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்காளர்பட்டியலில்பெயர்சேர்த்தல், நீக்குதல், முகவரிமாற்றம், தொகுதிமாற்றம் மேற்கொள்ளவிரும்புகிறவர்கள், வாக்குச்சாவடிகளில்நடத்தப்படும்சிறப்புமுகாம்களுக்குச்சென்றுஅதற்கானவிண்ணப்பங்களைஅங்குள்ளஅலுவலர்களிடம்பெற்று, பூர்த்திசெய்துஅளிக்கவேண்டும்.

18 வயதைபூர்த்திசெய்யக்கூடியமற்றும்இதுவரைபட்டியலில்பெயர்பதிவுசெய்யாதஅனைவரும் 6-ம்எண்விண்ணப்பத்தைஅளித்துபெயர்பதிவுசெய்யலாம். விண்ணப்பத்தில்குறிப்பிடப்பட்டுள்ளஉறுதிஅளிக்கும்பகுதியைகண்டிப்பாகபூர்த்திசெய்திருக்கவேண்டும். வாக்காளர்பட்டியலில்புகைப்படம்தெளிவாகஇருப்பதற்காக 200 டிபிஐரெசல்யூசன்கொண்டபுகைப்படத்தைவிண்ணப்பத்துடன்இணைக்கவேண்டும்.

சமீபத்தியவாடகைஉடன்படிக்கை, இந்தியதபால்துறையால்சமீபத்தில்பெறப்பட்டமுகவரியுடன்கூடியகடிதம், சமீபத்தியகுடிநீர், தொலைபேசி, மின்சாரம், காஸ்இணைப்புரசீதுஆகியவற்றில்ஏதேனும்ஒன்றின்நகலை, முகவரிசான்றாகசமர்ப்பிக்கலாம். வயதுசான்றாகபிறப்புசான்றிதழின்நகல், வயதுகுறிப்பிடப்பட்டஐந்து, எட்டு, 10ம்வகுப்புமதிப்பெண்சான்றிதழ், இந்தியபாஸ்போர்ட், ஓட்டுனர்உரிமம், ஆதார்அட்டைஆகியவற்றில்ஏதேனும்ஒன்றின்நகலைஅளிக்கலாம்.

ஏற்கனவேபெயர்பதிவுசெய்து, ஒருதொகுதியில்இருந்துவேறுதொகுதிக்குஇடம்மாறியவாக்காளர்கள், திருத்தத்துக்காக 6-ம்எண்விண்ணப்பத்தைவழங்கவேண்டும். தொகுதிக்குள்முகவரிமாறியவர்கள் 8விண்ணப்பம்வழங்கவேண்டும். பட்டியலில்திருத்தங்கள்ஏதாவதுமேற்கொள்ள 8-ம்எண்விண்ணப்பத்தைஅளிக்கவேண்டும். வாக்காளர்அடையாளஅட்டையில்திருத்தம்செய்யவேண்டும்என்றாலோ, தொலைந்துவிட்டாலோ, சிதைந்துவிட்டாலோபுதியஅட்டைக்காகதாலுகாஅல்லதுமாநகராட்சிமண்டலஅலுவலகத்தில் 001 விண்ணப்பத்தைஅளிக்கவேண்டும். வாக்காளர் சிறப்பு முகாம்களில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்கள், www.nvsp.in; https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்களிலும், 'VOTER HELP LINE' மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் கன மழை காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து துறையினரும், மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வாக்காளர் சிறப்பு முகாமை, வேறு தேதிக்கு மாற்றும்படி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் எழுதினார். அதையேற்ற தேர்தல் ஆணையம், சென்னையில் ௧௬ சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுவதை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இம்மாதம் 27, 28 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.