Asianet News TamilAsianet News Tamil

Chennai Power Shutdown: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம் சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

today Power Shutdown areas in Chennai
Author
First Published Oct 12, 2022, 10:00 AM IST

பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான போரூர், வானகரம், ஆவடி  உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம் சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மின்தடை ஏற்படும் இடங்கள்

போரூர் 

பூந்தமல்லி ருக்மணி நகர், முத்துகுமரன் நகர், ராஜேஸ்வரி நகர், பாரி கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி

 சி.எம்.பி.டி.டி ஜவகர்லால் நேரு 200 அடி ரோடு ஒரு பகுதி, மகாவிஷ்ணு நகர், ஆர்.டி.ஓ.அலுவலகம், பாரதி நகர், ரிங் ரோடு தேவகி நகர் மாத்தூர் மஞ்சம்பாக்கம், பார்வதிபுரம், ஜெயா நகர், தனலெட்சுமி நகர், அன்னை நகர், சுயம்புலிங்கம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வானகரம்

காரம்பாக்கம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் நகர், குமார் தியேட்டர், பழனியப்பா நகர், வானகரம் மெயின் ரோடு, மகரிசி டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி 

சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர் பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், தெற்கு வீதி, தந்தை பெரியார் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அலமாதி 

கன்னியம்மன் நகர், மோரை எஸ்டெட், வெள்ளனூர், வெல்டெக் ரோடு, அலமாதி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேரி 

துரைநல்லூர் கவரபேட்டை, பெருவாயல், ஆர்.என்.கண்டிகை, ஆரணி, சின்னம்பேடு, மங்கலம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

செங்குன்றம்

மனீஷ் நகர், சோத்துபாக்கம் ரோடு, ஜெய் துர்கா நகர், அருமந்தை ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- பள்ளி மாணவிக்கு தாலி; 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் ஹீரோயின்;சினிமாவை ஒழிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

Follow Us:
Download App:
  • android
  • ios