நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றா தமிழ்நாடு அரசு அதனை கண்காணிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றா தமிழ்நாடு அரசு அதனை கண்காணிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை பிறப்பிக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இருதினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கும் பல்வேறு மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இந்தநிலையில் எதிர்வரும் புத்தாண்டை கொண்டாட மக்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து, செயல்படுத்தியும் வருகின்றன. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் பரல்வ அதிகரித்து வருவாதால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதோடு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடைவிதிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில், சென்னைஎழும்பூர்கண்மருத்துவமனையில், நடைபெற்றமாவட்டபல்நோக்குநடமாடும்கண்மருத்துவவாகனங்களை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகக் கூறினார். ஒமைக்ரான் முடிவுகளுக்காக காத்திருப்பவர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். நட்சத்திர விடுதிகளும் இதுபோன்ற ஏற்பாடுகளை செய்யாமல் இருக்க வேண்டும். இதுவரை எந்த நட்சத்திர விடுதியும் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து அறிவிக்கவில்லை. அது மகிழ்ச்சி அளிக்கிறது. வேண்டுகோளையும் மீறி நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றா தமிழ்நாடு அரசு அதனை கண்காணிக்கும் என்று கூறினார். இதன்மூலம் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை கிடையாது என்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும், பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில்கொரோனாபாதிப்புஅதிகரித்துவருவதால், மக்கள், முகககவசம்அணிவதை 100 சதவீதம் உறுதிசெய்யவேண்டும். அனைத்துஇடங்களிலும்வீட்டைவிட்டுவெளியேவந்தால் 100% முககவசம்அணிந்துமற்றஊர்களுக்குசென்னைமக்கள்முன்னோடியாகஇருக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டில் மேலும் 118 பேருக்குஒமைக்ரான்அறிகுறிகண்டறியப்பட்டுள்ளது. அவர்களது ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்றும் அமைச்சர் தெரிவித்தூள்ளார்.