புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஒரு வருடத்திற்கு மட்டும் நிரப்பப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஒரு வருடத்திற்கு மட்டும் நிரப்பப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு மாவட்டங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். அதன் ஒரு பகுதியாக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றும் வன்னம் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், 2021 – 22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தநிலையில், புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, விருதுநகர்மாவட்டம்திருச்சுழி, கள்ளக்குறிச்சிமாவட்டம்திருக்கோயிலூர், ஈரோடுமாவட்டம்தாளவாடி, திண்டுக்கல்மாவட்டம்ஒட்டன்சத்திரம், திருநெல்வேலிமாவட்டம்மானூர், திருப்பூர்மாவட்டம்தாராபுரம், தர்மபுரிமாவட்டம்எரியூர், புதுக்கோட்டைமாவட்டம்ஆலங்குடி, மற்றும்வேலூர்மாவட்டம்சேர்க்காடுஆகிய 9 இடங்களில்புதியஇருபாலர்அரசுமற்றும்கலைஅறிவியல்கல்லூரிகள் தொடங்கப்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்மாவட்டம்கூத்தாநல்லூரில்ஒருபுதியமகளிர்அரசுகலைமற்றும்அறிவியல்கல்லூரி தொடங்குவதற்கு அனுமதிஅளித்துதமிழ்நாடுஅரசுஉத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லுரியிலும், இளங்கலை (தமிழ்), இளங்கலை (ஆங்கிலம்), இளம் அறிவியல் (கணிதம்), இளநிலை (வணிகவியல்) மற்றும்இளமறிவியல் (கணினிஅறிவியல்) ஆகிய 5 பாடப்பிரிவுகள்தொடங்குவதற்கானஅனுமதியும்வழங்கப்பட்டுள்ளது.

புதித்தாக தொடங்கப்படும் ஒவ்வரு அரசு அகலை அறிவியல் கல்லூரியிலும் 17 ஆசிரியர்கள், (உதவி பேராசிரியர் பணியிடங்கள் முதல் ஆண்டிற்கு மட்டும்) மற்றும் 17 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் வீதம் பத்து கல்லூரிகளுக்கும் 170 ஆசிரியர்கள், 170 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்தோற்றுவித்துஉத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு கல்லூரிக்கும், ஓர்ஆண்டுக்கானதொடர்செலவினமாக 21 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய்மற்றும்தொடராச்செலவினமாக 3 கோடியே 60 லட்சம்ரூபாய்எனமொத்தம் 24 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய்நிர்வாகஅனுமதிஅளித்துஉத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கல்லூரிகளில், இரவுகாவலர், அலுவலகஉதவியாளர், துப்புரவாளர்மற்றும்பெருக்குபவர்ஆகியபணியிடங்கள்வெளிமுகமைமூலம்நிரப்பப்படவேண்டும்எனகல்லூரிகல்விஇயக்குனருக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு கிராமப்புற மக்களுக்கும், கல்லூரி தொடங்கும் இடங்களில் வசிக்கும் மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.