மஞ்சப்பை வைத்திருப்பதது அவமானம் அல்ல. சுற்றுச்சூழலை காப்போரின் அடையாளம் தான் மஞ்சப்பை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மஞ்சப்பை வைத்திருப்பதது அவமானம் அல்ல. சுற்றுச்சூழலை காப்போரின் அடையாளம் தான் மஞ்சப்பை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காலநிலை மாற்றத்திற்கு பிளாஸ்டிக் பைகள் மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. கடலில் டன் கணக்கில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து, தட்ப வெப்ப நிலையும் மாறுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலும், ஒருமுறைமட்டும்பயன்படுத்தும் 14 வகைபிளாஸ்டிக்பொருட்களுக்குதடைவிதிக்கப்பட்டுகடுமையானநடவடிக்கைகளைதமிழகஅரசுசெயல்படுத்திவருகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை கொரோனா பரவல் காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் திமுக அரசு புதிதாக பொறுப்பேற்ற பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த வகையில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை கைவிட்டு மீண்டும் துணிப் பைகளுக்கு திரும்பும் வகையில், மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வுகளையும், அதற்கு மாற்றான துணி பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும் பொதுமக்கள் இடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மஞ்சப்பை பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சியை சுற்ற்ச்சூழல், காலவிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக்பொருட்களுக்குமாற்றாகபாரம்பரியபொருட்கள்கொண்டுஅமைக்கப்பட்டுள்ளகண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தொடங்கிவைத்தார். சுற்றுச்சூழல்காலநிலைமாற்றம்துறைஅமைச்சர்மெய்யநாதன், வனத்துறைஅமைச்சர்ராமச்சந்திரன், அமைச்சர்சேகர்பாபு, மத்தியசென்னைஎம்.பிதயாநிதிமாறன்ஆகியோர்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிளாஸ்டிக்நாகரீகம், மஞ்சப்பைகேவலம்எனும்சூழல்உள்ளது. மஞ்சப்பைவைத்திருந்தால்பட்டிக்காட்டான், கிராமத்தான் என்று சினிமாக்களில் அடையாளப்படுத்தும் நிலை உள்ளது என்று முதலமைச்சர் கவலையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், வணிகபோட்டிகாரணமாகவிதவிதமானபிளஸ்டிக்பைவிற்பனை செய்யப்படுகின்றன. வளரச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுற்றுச்சூழலுக்கும் தயவேண்டியது அவசியம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். ஒருமுறைபயன்படுத்திதூக்கிஎரியும்பிளாஸ்டிக்பைகள் நிலம், நீர், காற்று என அனைத்திற்கும்கேடுவிளைவிக்கிறது. சுற்றுச்சுழலைமாசுபடுத்துகிறது. கடல்வாழ்உயிரினங்கள்அழிந்து வருகின்றன. பிளாஸ்டிக் பைகள் எரிக்கப்படும் போது அது காற்றில்கலந்துகாற்றுநஞ்சாகிறது. அதைசுவாசிக்கும்மனிதர்களுக்குநுரையீரல்பாதிக்கிறது.
ஒருமுறைபயன்படுத்திதூக்கிஎரியும் 14 வகையானபிளாஸ்டிக்பொருட்கள்உற்பத்தியும், விற்பனையும்தடைவிதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு மின் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்ஒழிப்பைஅரசாங்கம்மட்டும்நினைத்தால்செயல்படுத்தமுடியாது, மக்களும்இணைந்துசெயல்படவேண்டும். பிளாஸ்டிக்பைகளை பொதுமக்கள் நிராகரிக்கவேண்டும். மஞ்சப்பை என்பது அவமனாம் அல்ல. சுற்றுச்சூழலை காப்போரின் அடையாளம் தான் மஞ்சப்பை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்தநிகழ்ச்சியில், தடைவிதிக்கப்பட்டபிளாஸ்டிக்பொருட்களுக்குமாற்றுப்பொருட்களைதயாரிக்கும்தயாரிப்பாளர்களின்விளக்கப்படகண்காட்சிபொதுமக்களின்பார்வைக்காகவைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்மாற்றுப்பொருட்களுக்கானகண்காட்சியைஇன்றுமாலை 7 மணிவரைபொதுமக்கள்பார்வையிட்டு, அதனைதங்களுடையவாழ்விலும்உபயோகித்துசுற்றுச்சூழலைபாதுகாக்குமாறுதமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
