Asianet News TamilAsianet News Tamil

அப்படினா பள்ளி நிர்வாகம் சொன்னது பொய்யா? பள்ளி மாணவன் இப்படி தான் உயிரிழந்தார்.. வெளியான பரபரப்பு தகவல்கள்.!

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். மேலும், பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வேனைவிட்டு இறங்கிய தீக்‌சித், பள்ளிக்கு நடந்து சென்ற போதுதான் விபத்து நேரிட்டது தெரியவந்தது. 

student was killed when he got on the front wheel of a school van... Shock information
Author
Chennai, First Published Apr 1, 2022, 11:31 AM IST

சென்னையில் ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் தீக்சித் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்தில் பள்ளி மாணவன் பலி

சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பள்ளி வேன் மோதியதில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க;- 10 நிமிஷத்துல போய் பார்க்கும் போது என்னுடைய குழந்தைக்கு உயிரே இல்ல.. உடம்பு முழுவதும் ரத்தம்.. தாயின் கதறல்

student was killed when he got on the front wheel of a school van... Shock information

சிறையில் அடைப்பு

இது தொடர்பாக, பள்ளித் தாளாளர் ஜெயசுபாஷ், தலைமை ஆசிரியை தனலட்சுமி, வேன் ஓட்டுநர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து,  ஓட்டுநர் பூங்காவனம், ஞானசக்தி கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

student was killed when he got on the front wheel of a school van... Shock information

சிசிடிவி காட்சிகள்

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். மேலும், பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வேனைவிட்டு இறங்கிய தீக்‌சித், பள்ளிக்கு நடந்து சென்ற போதுதான் விபத்து நேரிட்டது தெரியவந்தது. மாணவன் செல்வதை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் முன்பக்கமாக இயக்க, தீக்‌சித் மீது வேனின் முன்சக்கரம் ஏறி இறங்கிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, வேனை பின்னோக்கி எடுக்கும்போது மாணவன் சிக்கி இறந்ததாக ஏற்கெனவே கூறப்பட்டது உண்மை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

student was killed when he got on the front wheel of a school van... Shock information

அதிர்ச்சி தகவல்

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பூங்காவனம், மாநகராட்சியில் ஓட்டுநராக வேலை பார்த்தவர். அங்கு ஓய்வுபெற்ற பிறகு, இப்பள்ளியில் ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. ஒரு காது சரியாக கேட்கவில்லை. 64 வயதாகும் அவர் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க;- "மகனைப் புதைக்க இடம் தாராத நீங்கள் எல்லாம் கிறிஸ்டியன் சொல்லாதீங்க".. ஒரே மகனை இழந்த தாயின் கதறல்.!

Follow Us:
Download App:
  • android
  • ios