ஹெல்மெட் அணிவது தொடர்பாக ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வையும், உதாரணமாக திகழும் வாகன ஓட்டிகளை போலீஸார் பாராட்டுவதும் அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. அதுபோன்ற ஓர் உதாரண சம்பவம் நேற்று நடைபெற்றது. 

தந்தையோடு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணித்த சிறுவனை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வாகனத்தின் பின் சீட்டில் உட்கார்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில் மெத்தனம் காட்டிவருகிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


எத்தனை விழிப்புணர்வு செய்தாலும் அதை பெரிதாகக் காதில் போட்டுக்கொள்வதில்லை. இதற்கிடையே புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராத தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு பயந்தாவாது வாகனஓட்டிகள் ஹெல்மெட் அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வையும், உதாரணமாக திகழும் வாகன ஓட்டிகளை போலீஸார் பாராட்டுவதும் அவ்வப்போது நடைபெற்றுவருகிறது.