Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரின் அலட்சியத்தால் அநியாகமாக பறிபோகும் உயிர்கள்.. ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை..!

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மருந்து நிறுவன பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். 

Online Gambling.. Drug company representative commits suicide
Author
First Published Mar 4, 2023, 10:04 AM IST

சென்னை தாம்பரம் அருகே ஆன்லைன் ரம்மியால் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ நிறுவன பிரதிநிதி வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மருந்து நிறுவன பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுகாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பல்வேறு லோன் ஆப்களில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கி விளையாடி மொத்த பணத்தையும் இழந்துள்ளார். 

இதையும் படிங்க;- இந்த படத்துல இருக்கிற மாதிரியே பண்ணணும்.. இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி வயாகரா போட்டு கணவர் டார்ச்சர்

Online Gambling.. Drug company representative commits suicide

இதனால், கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தாலும், பணத்தை இழந்த காரணத்தாலும் மனவேதனை அடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற மனைவி வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் சடலமாக J}தூக்கில் தொங்கியதை பார்த்து அலறி கூச்சலிட்டு கதறினார். 

Online Gambling.. Drug company representative commits suicide

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினோத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் படிங்க;- ஆணவம் பிடித்த இபிஎஸ் என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் மட்டுமே அதிமுக வளரும்! பண்ருட்டி ராமச்சந்திரன் விளாசல்.!

Online Gambling.. Drug company representative commits suicide

 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios